போராட்டக்காரர்கள் மோதலால் சிலாபத்தில் பதற்றமான சூழல்!

Date:

சிலாபத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவான ஒரு குழுவிற்கும் அரசாங்கத்திற்கு எதிரான மற்றுமொரு குழுவிற்கும் இடையில் சிலாபம் நகர பகுதியில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தலைமையிலான அரச சார்பு செயற்பாட்டாளர்கள் புத்தளம் நோக்கி பேரணியாகச் சென்ற போது, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மற்றுமொரு குழுவைச் சேர்ந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை எதிர்கொண்டு மோதலில் ஈடுபட்டதையடுத்து பதற்றமான நிலைமை உச்சக்கட்டத்தை எட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மோதலில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...