‘மகாநாயக்க தேரர்களின் பிரேரணைகளை நடைமுறைப்படுத்துங்கள்: கொழும்பில் நடைபெற்ற மகா சங்க மாநாட்டில் உறுதிமொழி

Date:

மகாநாயக்க தேரர்கள், முன்வைத்த யோசனைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று ‘உயர் பீடாதிபதியின் பிரகடனத்தை வலுப்படுத்துதல்’ என்ற தொனிப்பொருளில் சங்க இணக்கப்பாட்டிற்கான சங்கத்தின் மாநாடு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

இதன்போது, பிரதமரை நீக்கிவிட்டு சர்வகட்சியின் இடைக்கால அரசாங்கத்தை நியமிக்குமாறு பிரதம தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு இடமளிக்காவிட்டால், அனைத்து அரசியல்வாதிகளையும் மகா சங்கம் நிராகரிக்கும் என மாநாட்டின் போது உறுதிமொழியை வழங்கிய பௌத்த பிக்குகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிக்குகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், கொழும்பு 07 பௌத்த மாநாட்டிலிருந்து சுதந்திர சதுக்கத்திற்கு தேரர் பேரணியாகச் சென்றார்.

சங்க மாநாட்டின் உறுதிமொழியை கலாநிதி ஒலகன்வத்தை சந்திரசிறி தேரர் வழங்கி வைத்தார்.
இதன்போது உரையாற்றிய அவர் இலங்கையின் கடுமையான நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர சங்கத்தினர் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆட்சியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு முன், அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே, பிக்குகள் மாநாட்டைக் கூட்டியதாக, உச்ச தலைவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலாநிதி ஓமல்பே சோபித தேரர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை விடுத்து நாட்டைக் கட்டியெழுப்ப எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...