ரம்புக்கனை போராட்டம்: ‘குறைந்தபட்ச அதிகாரத்தையே பயன்படுத்த வேண்டியேற்பட்டது’ :பொலிஸ் மா அதிபர்

Date:

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸாருக்கு குறைந்தபட்ச அதிகாரத்தை பயன்படுத்த வேண்டியேற்பட்டதாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் ரம்புக்கணை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்துவெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

30,000 லீற்றர் எரிபொருள் அடங்கிய பௌசருக்கு ஒரு கும்பல் தீ வைப்பதைத் தடுக்க பொலிஸார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்ததாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனால் பெரும் சேதத்தை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ரம்புக்கனை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் அதிக பலத்தை பிரயோகித்ததா என்பது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

எரிபொருள் கொண்டு செல்லும் பவுசர்களுக்கு இடையூறு ஏற்படுத்தவோ அல்லது சேதத்தை ஏற்படுத்தவோ வேண்டாமென பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

காசா குழந்தைகளின் கல்விக்காக ஸ்வீடன் பில்லியனர் ரோஜர் அகெலியஸ் சுமார் $76 மில்லியன் நிதியுதவி.

போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதி குழந்தைகளின் கல்வித் தேவைகளை மறுசீரமைப்பதற்காக,...

டெங்கு பரவலால் கொழும்பு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் Online-இல்!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நிலவும் டெங்கு பரவல் காரணமாக, அனைத்து கல்வி நடவடிக்கைகளையும்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...