லிட்ரோ நிறுவனத்தின் தலைவருக்கு 3 மில்லியன் ரூபா சம்பளம்: ‘மக்களுக்காக சில தியாகங்களை செய்யுங்கள்’

Date:

எரிவாயு விலை அதிகரிப்பின் அழுத்தத்தை மக்கள் தாங்க வேண்டுமானால் அரச நிறுவனமான லிட்ரோவின் உயர்மட்ட அதிகாரிகளும் தியாகம் செய்ய வேண்டியிருக்கும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் 3 மில்லியன் ரூபா பாரிய சம்பளம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும், அவ்வாறு சம்பளம் பெறுவதில் நியாயம் இல்லை எனவும் அசேல தெரிவித்தார்.

இந்த உயர் சம்பளத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தான் லிட்ரோ நிறுவனத்திற்கு அசேல பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த (26) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 4,860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.

5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 1945 ரூபாவாக அமைந்துள்ளதுடன் 2.3 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 910 ரூபாவாக உள்ளது.

கடந்த 22 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 5,175 ரூபா வரை அதிகரிப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்தாலும், அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு அமைய அந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...