வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பதிவை ரத்து செய்யுமாறு எரிசக்தி அமைச்சர் பணிப்புரை!

Date:

எரிபொருள் போக்குவரத்துக்காக புதிய விநியோகஸ்தர்களை உடனடியாக பதிவு செய்யுமாறு இலங்கை பெட்ரோலிய சேமிப்பு நிலையத்தின் லிமிடெட் நிறுவனத்திற்கு எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.

தனியார் எரிபொருள் தாங்கிகள் சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பதிலளித்து எரிசக்தி அமைச்சர் டுவிட்டர் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடமைக்கு சமூகமளிக்கத் தவறும் விநியோகஸ்தர்களின் பதிவை ரத்து செய்யுமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

புகையிரத சேவைகள், அரசாங்கத்திற்கு சொந்தமான பௌசர்கள், பெற்றோல் நிலைய பௌசர்கள் மற்றும் எரிபொருள் போக்குவரத்திற்காக வேலைநிறுத்தம் செய்யாத தனியார் வாடகை பௌசர்களின் சேவைகள் தொடர்ந்தும் இயங்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இன்றையதினம் (ஏப்ரல் 30) மாலை 4.00 மணியளவில் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்ட மொத்த பவுசர்களின் எண்ணிக்கை 381 எனவும் அவர் கூறினார்.

சூப்பர் டீசல், ஒக்டேன் 92 பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன மொத்தமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஒக்டேன் 95 பெற்றோலின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...