‘அடுத்த இரண்டு நாட்களுக்கு பெற்றோல் இல்லை’:எரிசக்தி அமைச்சர்

Date:

‘எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது, எனினும் வார இறுதியில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும்’ என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இரண்டாவது நாளாக இன்று (மே 18) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் பெற்றோல் விநியோகம் ஏறக்குறைய நிறுத்தப்பட்டு, ஒரே நேரத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் வறண்டு கிடப்பதால், நாட்டின் பல பகுதிகள் குறிப்பாக கொழும்பில் பல பகுதிகளில் எரிபொருளைக் கோரி போராட்டங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், நாட்டில் ஒரு நாளுக்கு மாத்திரமே போதுமான அளவு பெற்றோல் இருப்பதாக வெளிப்படுத்தினார்.

இதேவேளை இன்று (மே 18) பெற்றோல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், அத்தியாவசிய தேவைகளுக்கு அன்றி, வரிசையில் நிற்க வேண்டாம் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வழக்கமான விநியோகம் நாளை (மே 19) தொடங்கும் எனவும், எரிபொருள் நிலையங்களில் டீசல் கிடைக்கும் எனவும் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...