அவிசாவளை , கல்முனை பகுதிகளில் 2 சிறுவர்களை காணவில்லை!

Date:

அவிசாவளை, கொட்டகொடவத்த பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரும் காணாமல் போயுள்ளார்.

தமது பிள்ளை வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த மாணவன் கடந்த (28) முதல் காணாமல் போயுள்ளதாக அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பெற்றோர் நேற்று (29) இரவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இவர் முன்பு வீட்டை விட்டு வெளியேறி நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து சில நாட்கள் கழித்து திரும்பினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கல்முனையில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி, நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பு பாடசாலையில் இருந்து காணாமல் போனதாக புகாராளிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சாலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒத்துழைப்பு: சிரியா சென்றடைந்தார் உக்ரைன் ஜனாதிபதி.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான்...

புத்தாண்டு காலத்தில் இணையவழி மோசடி: பொலிஸார் எச்சரிக்கை

இணையவழி பணப்பரிமாற்றங்களின் போது பொதுமக்களை ஏமாற்றி முன்னெடுக்கப்படும் நிதி மோசடி குறித்து...

மத்திய கிழக்கு மோதல்: ஐநா உடனடியாகத் தலையிடக் கோரி கொழும்பில் ஐநா அலுவலகத்தில்’தர்மசக்தி அமைப்பு’ மகஜர் கையளிப்பு.

இலங்கையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றி வரும் பௌத்த,...