அவிசாவளை , கல்முனை பகுதிகளில் 2 சிறுவர்களை காணவில்லை!

Date:

அவிசாவளை, கொட்டகொடவத்த பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரும் காணாமல் போயுள்ளார்.

தமது பிள்ளை வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த மாணவன் கடந்த (28) முதல் காணாமல் போயுள்ளதாக அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பெற்றோர் நேற்று (29) இரவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இவர் முன்பு வீட்டை விட்டு வெளியேறி நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து சில நாட்கள் கழித்து திரும்பினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கல்முனையில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி, நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பு பாடசாலையில் இருந்து காணாமல் போனதாக புகாராளிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...