ஆயிஷாவின் குடும்பத்திற்கு விரைவில் நீதி வழங்க ஜனாதிபதி உறுதி!

Date:

‘ஈவிறக்கமின்றி முறையில் கொல்லப்பட்ட சிறுமி ஆயிஷாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த கொடூரமான குற்றத்திற்காக அவரது குடும்பத்திற்கு விரைவான நடவடிக்கை மற்றும் நீதியை விரைவுபடுத்துவதற்கு நான் உறுதியளிக்கிறேன், என்று ஜனாதிபதி தனது ட்வீட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விரைவான நடவடிக்கை மற்றும் நீதியை துரிதப்படுத்துவதாக உறுதியளித்தார்.

அட்டுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா மே 27ஆம் திகதி காணாமல் போயிருந்தார். இன்று மே 28ஆம் திகதி வயல் வெளிகள் அமைந்துள்ள ஓடைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய உதவும் பிரேத பரிசோதனை நாளை, மே 29 ஆம் தேதி நடைபெறும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று தொழிற்சங்க நடவடிக்கை!

பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (17) காலை 8 மணி முதல்...

வடக்கு, கிழக்கு பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற  தாழ் அமுக்க வலயம் தொடர்ந்தும் நிலை...

மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழு!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து,...

புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் பி.ஏ. ஹுசைன்மியா நியமனம்!

மலாய், தென் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய ஆய்வுகளில் சர்வதேச ரீதியாக அறியப்படும்...