எரிபொருளைக் கொண்டு செல்ல பொலிஸ் பாதுகாப்பு தேவை: தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்கள்

Date:

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில குழுக்கள் செய்த பல்வேறு இடையூறுகளை மேற்கோள் காட்டி, சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி சாந்த சில்வா எரிபொருள் போக்குவரத்தின் போது பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கடமைக்கு சமூகமளிக்க முடியாது என பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (22) சராசரியாக 3,600 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் பெற்றோலை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழமையான நாட்களில், ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகம் நடைபெறாது. எவ்வாறாயினும், இன்றும் எரிபொருள் விநியோகம் தொடர்கிறது, குறிப்பாக 92 ஒக்டேன் பெற்றோலின் விநியோகம் தொடர்கிறது.

Popular

More like this
Related

எலிக்காய்ச்சலை தடுக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

எலிக்காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் வடமத்திய மாகாணத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாளைய...

5 ஆவது மீளாய்வு குறித்து இலங்கையுடன் IMF பணியாளர் மட்ட ஒப்பந்தம்!

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களும் இலங்கை அதிகாரிகளும் 4 ஆண்டு நீட்டிக்கப்பட்ட...

இஸ்ரேல் – ஹமாஸ் முதற்கட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டது: பணயக் கைதிகள் விடுவிப்பிற்கு ஹமாஸ் இணக்கம்!

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான முதற்கட்ட போர்...

கட்டுரை: ஹமாஸின் சாணக்கியம்: முஸ்லிம்கள் தெரிய வேண்டியது என்ன?

அஹ்மத் அல்-ரஷீத் அல்ஜஸீராவிலிருந்து.. அரசியல் என்பது சாத்தியங்களின் கலை, கனவுகளின் கலை அல்ல என்று...