காலி முகத்திடல் போராட்டம் தொடர்பான மனுவை விசாரணை செய்வதிலிருந்து நீதவான் விலகியுள்ளார்!

Date:

காலி முகத்திடலில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக இலங்கை பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை விசாரணை செய்வதிலிருந்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவெல விலகியுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக இலங்கை பொலிஸாரால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி சவேந்திர விக்ரம நீதிமன்றில் தெரிவித்தார்.

இந்த கோரிக்கையை பரிசீலிக்க நீதிமன்றம் தயாராக இருந்தால், நீதிமன்றத்தில் சமர்பிக்க தயார் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், ஏனைய சட்டத்தரணிகளுடன் ஆஜராகியிருந்தார்.

கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணாவெல, இரு தரப்பினரும் சமர்ப்பித்த உண்மைகளை பரிசீலித்ததன் பின்னர், அவ்வாறான கோரிக்கையை பரிசீலிப்பதில் இருந்து விலக தீர்மானித்ததுடன், கோரிக்கையை வேறொரு நீதவானிடம் ஒப்படைக்குமாறும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...