எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமர் பதவியை ஏற்க விரும்பினால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், சுயேச்சைக் குழுவும் அவருக்கு ஆதரவளிக்கத் தயார் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வது தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற நிலையில் ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே தாம் பிரதமர் பதவியை ஏற்பேன் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.