சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 19 பேர் கைது!

Date:

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 19 பேர் கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நடத்தப்பட்ட ரோந்து நடவடிக்கையில் நேற்றிரவு (18) 7.30 மணியளவில் கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த 19 பேரும் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் சிறுவன் ஒருவனும் பெண்ணொருவரும் அடங்குவதாகவும் நாளை 20ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...