‘சுயநல அரசியலை முடிவுக்குகொண்டு வர வேண்டும்’:சிராஜ் மஷூர்

Date:

இன்றைய அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தை பாதுகாக்கும் இடமாக மாற்றியுள்ளனர். மக்கள் அடிப்படை பிரச்சினைகளை வெளிக்கொணர்தற்காகவே இந்த போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றதாக சமூக நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் சிராஜ் மஷூர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் அக்கரைப்பற்று நகரில் நடைபெற்ற ஹர்த்தால் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை வங்குரோத்தாக்கி மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சிக்குட்படுத்திய இந்த ராஜபக்ஷ குடும்பத்தை வீட்டுக்கு அனுப்பவேண்டும்.

அவர்களை நீதிக்கு முன்னே நிறுத்த வேண்டும். இந்த நாட்டின் உண்மையான மக்கள் அபிலாஷைகளை வென்றெடுக்கத்தான் தமிழ், முஸ்லிம், சிங்களம் என அனைத்து இன மக்களும் இங்கு ஒன்று திரண்டுக்கின்றது.

மேலும் அழகிய வளங்களைக் கொண்டுள்ள இந்நாட்டை இன்று மோசமாக நிலைமைக்கு தள்ளிய கள்வர் கூட்டத்தை மீண்டும் மீண்டும் தெரிவு செய்யாமல் நேர்மையான அரசியல் தவைர்களை தெரிவு செய்ய வேண்டும்.

அதேவேளை சுயநல அரசியலையும் கோழைத்தனமான அரசியலையும் முடிவுக்குகொண்டு வர அனைவரும் இணைந்து போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...