தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டது!

Date:

இலங்கை தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தமது கோரிக்கைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாக தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றும் நாடு முழுவதிலும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

அதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது, 90 வீதமான கோரிக்கைகள் கிடைத்துள்ளதாகவும், எரிபொருள் நிரப்பும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் சாந்த சில்வா தெரிவித்தார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...