திருகோணமலையில் சந்தேகத்தின் பேரில் 15 க்கும் அதிகமானோர் கைது!

Date:

திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 15 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்திலேயே இவ்வாறு கைதுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் வீடுகள் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் பொலிசாரினால் வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கைதானவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் கருத்து தெரிவித்து சமூக செயற்பாட்டாளரும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான ரொஷான் அக்மீமன இவ்வாறு கருத்து தெரிவித்தார்…..
“இவ்வாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அதுக்கோரள அவர்களின் வீடு சேதமாக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு பொலிசாரினால் வரவழைக்கப்படும் இளைஞர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலையில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான அமைதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் எனவும் இவ்வாறான கைதுகள் அரசின் சர்வாதிகாரத்தை வெளி காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் ஜனநாயகமான ஆட்சி ஒன்று அமைய வேண்டும் என இளைஞர் யுவதிகள் வீதிக்கு இறங்கி இவ்வாறான போராட்டத்தை முன்னெடுக்கும் இவ்வேளையில் இவ்வாறான கைதுளை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்த சமூக செயற்பாட்டாளரும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான ரொஷான் அக்மீமன.

மேலும் நாளைய தினம் திருகோணமலை நகரின் சமூக செயற்பாட்டாளர் ஒருவரை உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் பெறுவதற்காக பொலிசரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளரும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான ரொஷான் அக்மீமன தெரிவித்தார்.”

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...