துப்பாக்கிச் சூடு உத்தரவை இரத்து செய்வதாக ரணில் உறுதி!

Date:

அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னர் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிச் சூடு நடத்தும் உத்தரவை ரத்து செய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

இந்த நடைமுறை குறித்து வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் விக்கிரமசிங்கவிடம் வினவியபோதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

மேலும், கலவரம் மீண்டும் தொடங்கினால் மட்டுமே பாதுகாப்புப் படையினருக்கு இதுபோன்ற உத்தரவுகள் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கம் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்து ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...