‘நந்தேட ஜங்கியக்’: பாராளுமன்றம் அருகே உள்ளாடை போராட்டம்!

Date:

இலங்கை பாராளுமன்றத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் தடுப்பு தடுப்புகளில் பல ஆண் மற்றும் பெண் உள்ளாடைகள் காட்சிப்படுத்தப்பட்டு தனித்துவமான போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளாடைகளில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

தேசிய நெருக்கடி தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளாடைகள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ‘கோட்டகோகம மற்றும் ஹொரா கோ காம’ எதிர்ப்பு பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘நந்தேட ஜங்கியக்’ என்ற தொனிப்பொருளின் கீழ் உள்ளாடைகளை பொலிஸ் தடுப்புகளில் தொங்கவிட்டு சர்வதேச உள்ளாடைகள் இல்லாத தினம் 2022 ஐ கொண்டாடினர்.

‘நந்தேட ஜங்கியக்’ எனும் தொனிப்பொருள் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவைக் குறிப்பிடுவதாகும்.

அதேவேளை “இதுதான் எமக்கு மிச்சம்” எனக் கூறி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்ற நுழைவாயில் ‘ஹொரா கோ காம’ அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு மற்றும் சிலர் உள்ளாடைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியதைக் காண முடிந்தது.

உள்ளாடைகளைக் கூட ஆடம்பரப் பொருளாக்கி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பறித்த ஆட்சியாளருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...