நாடளாவிய ரீதியில் நாளை ஹர்த்தால்: போக்குவரத்து சேவைகள் நிறுத்தம்!

Date:

இன்றைய தினம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்துகளை இயக்குவதில் இருந்து விலகுவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

பல தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, தற்போது இலங்கையில் டீசலுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது, இது பொது போக்குவரத்தின் செயல்பாடுகளை பாதித்துள்ளதுடன் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு இலங்கையில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை பாதித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கையில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில, நாட்டிற்கு நாளொன்றுக்கு 4000 மெட்ரிக் தொன் டீசல் தேவைப்படுகிறது, ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 1000- 1500 தொன் மட்டுமே வெளியிடப்படுகிறது, இது மின் உற்பத்திக்கு தேவையான டீசல் ஒதுக்கீட்டை வழங்கியதன் காரணமாகும்.

அடுத்த டீசல் ஏற்றுமதி மே மாதம் 11 ஆம் திகதி வரும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 2 நாட்கள் தாமதமாகி வருவதாக அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

இதேவேளை அரசாங்கத்திற்கு இலங்கை முழுவதும் மே 6 நாளை பூரண ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அதன்படி 6 ஆம் திகதி 1000 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ளும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டணி அறிவித்துள்ளது.

அதேபோல ரயில்வே தொழிற்சங்கங்களும் இன்று நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளன.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...