பஸ் கட்டண அதிகரிப்பால் ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரிப்பு!

Date:

பஸ் கட்டண அதிகரிப்பு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரத பயணிகளின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பிரதி பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

பயணிகள் நெரிசலைக் குறைக்கும் வகையில் இன்று (30) பல ரயில்களில் இரண்டு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெரிவித்த காமினி செனவிரத்ன, மேலும் பல ரயில்களுக்கு நாளையதினம் இரண்டு கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், பயணிகளின் எண்ணிக்கை எதிர்பாராத அதிகரிப்பு மற்றும் தொலைதூரப் பகுதிகளிலுள்ள புகையிரத நிலையங்களில் பயணச்சீட்டுகள் தீர்ந்து போவதனால் புகையிரத நிலைய அதிபர் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், இன்று காலை பெலியத்த புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்ட ‘ரஜரட்ட ரஜின’ புகையிரதம் பெலியத்த புகையிரத நிலையத்தில் நிரம்பியிருந்ததால் மாத்தறை புகையிரத நிலையத்தில் பல பயணிகள் ரயிலில் ஏற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...