பாடசாலை மாணவர்களுக்கிடையில் இன, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விசேட நிகழ்வு!

Date:

பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் இன, மத நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தவும் விசேட நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றது.

புத்தளம் மாவட்டம் ஆனமடுவ தேர்தல் தொகுதிக்குட்பட்ட பகுதியில் சங்கட்டிகுளம் சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கிடையில் இந்த விசேட நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வளவாளராக டி.எம்.கயான் புஸ்பகுமார, பிரியன்த தீபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் சர்வ மதத் தலைவர்களான, ரபாவே சுமண ரதன தேரர், எம்.சவேந்திர சர்மா குருக்கள், அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் மௌலவி, அருட்தந்தை ரத்னமலர் ஆகியோர் கலந்துகொண்டு முக்கிய வழிகாட்டல்களையும் கருத்துரைகளையும் வழங்கினார்கள்.

இந்த நிகழ்வை தேசிய சமாதான பேரவையின் புத்தளம் மாவட்டக்கிளையின் பொறுப்பாளர் முஸ்னியா நெறிப்படுத்தினார்.

அதேவேளை இனங்களுக்கிடையிலான சகவாழ்வு சம்பந்தமான கருத்துக்களை பதிவு செய்யும் வகையில் நடைமுறை உதாரணங்களோடு இந்த பயற்சி செயலமர்வு நிகழ்வு நடைபெற்றது.

அதுமட்டுமில்லாது சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களிடையே வெசாக் கூடுகள் கட்டியும், மேலும் சில விளையாட்டு பயிற்சிகளையும் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...