பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவு!

Date:

பிரதி சபாநாயகர் பதவிக்கு அஜித் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைய அஜித் ராஜபக்ஷ 109 வாக்குகளும் ரோஹினி கவிரத்ன 78 வாக்குகளும் செல்லுபடியாகாத வாக்குகள் 23 கிடைக்கப்பெற்றன.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக இன்று (மே 17) பாராளுமன்றம் கூடியது.

அதன்படி இன்று காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகி பிரதி சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டார்.

இதன்போது, பிரதி சபாநாயகர் பதவிக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்டனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அஜித் ராஜபக்ஷவின் பெயரும், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் திருமதி ரோஹினி கவிரத்னவின் பெயரும் இப்பதவிக்கு முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...