புதிய பிரதமரால் இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியும்: அமெரிக்க தூதுவர்

Date:

புதிய பிரதமர் உட்பட அரசாங்கம் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும்முடியும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் விரும்பும் அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுத்து நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் தூதுவர் இதன்போது, வலியுறுத்தினார்.

மேலும், இலங்கை-அமெரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் என நம்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்த அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளித்து வருவதற்கு சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்ற காதி நீதிபதிகளுக்கான விசேட பயிற்சிப் பட்டறை

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ (All Ceylon YMMA Conference) பேரவையின் அனுசரணையுடன்,...

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ- பங்களாதேஷ் பிரதமருக்கிடையில் விசேட சந்திப்பு: சுற்றுலா, மருந்து உற்பத்தித்துறை குறித்து பேச்சு.

பங்களாதேஷின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் மற்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை...

நாட்டின் சில பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது...

சவூதியில் ரமழான் பிறை தென்பட்டது: நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்

சவூதி அரேபியாவில் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம்...