புதிய பிரதமரால் இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியும்: அமெரிக்க தூதுவர்

Date:

புதிய பிரதமர் உட்பட அரசாங்கம் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும்முடியும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் விரும்பும் அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுத்து நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் தூதுவர் இதன்போது, வலியுறுத்தினார்.

மேலும், இலங்கை-அமெரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் என நம்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்த அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளித்து வருவதற்கு சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...