புலிகளின் தாக்குதல்கள் தொடர்பான இந்திய உளவுத்துறை எச்சரிக்கையின் காரணமாக பேருந்துகளில் பயணப்பொதிகள் தடைசெய்யப்பட்டுள்ளன!- கெமுனு

Date:

பயணிகளின் பாதுகாப்பிற்காக பேருந்துகளில் தேவையற்ற பயணப்பொதிகளை எடுத்துச் செல்வதை கடுமையாக கட்டுப்படுத்துவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது, பயணிகள் தங்கள் பைகளை ‘லக்கேஜ் ரேக்குகளில்’ வைப்பதை விட தங்களுடைய உடைமைகளில் பராமரிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

‘எதிர்வரும் நாட்களில் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பாதுகாப்பை வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்று பிரத்தியேகமாக தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பேருந்து ஊழியர்களுக்கு சங்கம் அறிவுறுத்தியது என்று அவர் கூறினார்.

பஸ்களில் சந்தேகப்படும்படியான பயணப்பொதிகள், மற்றும் நபர்கள் இருந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் அறிவுறுத்தினர்.

பயணிகள் தங்களுடைய தனிப்பட்ட பாதுகாப்பையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...