மஹிந்த முன்னரே அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்: சமல் ராஜபக்ஷ!

Date:

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது நிறைவேற்று ஜனாதிபதி பதவி முடிவடையும்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், “பதவிகளை விட்டுக்கொடுக்க ஒருவர் தயாராக இருக்க வேண்டும். காலி முகத்திடலிலும், அலரிமாளிகைக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை, பொலிஸ் மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் தடுக்கத் தவறிவிட்டனர். அதனால் அவர்கள் திடீரென ஆத்திரமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்களைத் தடுக்காமல் ஐ.ஜி.பி.யும் பாதுகாப்புச் செயலாளரும் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது” என தெரிவித்தார்.

மேலும், அரசாங்க அரசியல்வாதிகள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

Popular

More like this
Related

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...