மிரிஹான ஆர்ப்பாட்ட சம்பவம்: பிணையில் விடுவிக்கப்பட்ட 15 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணை

Date:

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 15 பேர் இன்று (2) குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டு சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 9.30 மணியளவில் சட்டத்தரணி நுவான் போபகே தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவுடன் இந்தக் குழுவினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகியிருந்தனர்.

அதற்கமைய குறித்த விசாரணை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் 31ஆம் திகதி இரவு மிரிஹான கலவரம் தொடர்பில் 54 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்து நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 15 பேர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை (3) மற்றுமொரு குழுவிற்கு அழைப்பாணை விடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இக்குழுவினரிடம் சம்பவம் தொடர்பிலும், சம்பந்தப்பட்ட நபர்கள், பஸ்களுக்கு தீ வைத்தவர்கள் தொடர்பாகவும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...