மிரிஹான ஆர்ப்பாட்ட சம்பவம்: பிணையில் விடுவிக்கப்பட்ட 15 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணை

Date:

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 15 பேர் இன்று (2) குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டு சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 9.30 மணியளவில் சட்டத்தரணி நுவான் போபகே தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவுடன் இந்தக் குழுவினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகியிருந்தனர்.

அதற்கமைய குறித்த விசாரணை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் 31ஆம் திகதி இரவு மிரிஹான கலவரம் தொடர்பில் 54 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்து நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 15 பேர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை (3) மற்றுமொரு குழுவிற்கு அழைப்பாணை விடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இக்குழுவினரிடம் சம்பவம் தொடர்பிலும், சம்பந்தப்பட்ட நபர்கள், பஸ்களுக்கு தீ வைத்தவர்கள் தொடர்பாகவும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...