மே 9, கலவரம் தொடர்பில் டான் பிரியசாத் கைது செய்யப்பட்டார்!

Date:

காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி அலரிமாளிகை தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் டான் பிரியசாத்தை கைது செய்துள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளன.

கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க மற்றும் சனத் நிஷாந்த ஆகியோர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் டான் பிரியசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோ, சீதாவக்க பிரதேச சபையின் தலைவர் ஜயந்த ரோஹன மற்றும் களனி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுள பிரசன்ன ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...