லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் இன்று ஆரம்பமாகவுள்ளது!

Date:

லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகத்தை இன்று துரிதப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சில தினங்களின் பின்னர் இன்று கொழும்பு மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு எரிவாயு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேல்மாகாணத்தில் ஏற்கனவே அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே சமையல் எரிவாயு விநியோகிக்ப்பட்டு வந்த நிலையில் தற்போது அனைத்து மக்களுக்கு எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.

நேற்றும் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், 35,000 மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லிட்ரோ நிறுவன அதிகாரிகளை இன்று அழைக்குமாறு கோப் குழுவின் தலைவருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட கப்பலில் இருந்து எரிவாயு விநியோகிப்பதற்கான லொறிகள் தாமதமாக வழங்கப்படுவது தொடர்பில் லிட்ரோ நிறுவன அதிகாரிகளிடம் வினவவே இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...