அட்டுளுகம சிறுமி மரணம்: குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைகள் ஆரம்பம்

Date:

அட்டுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிஷா என்ற 09 வயது சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மையை கண்டறியும் விசாரணைகள் இடம்பெறுவதாக பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ‘நியூஸ் நவ்’ செய்தி தளத்துக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், குறித்த சிறுமியின் பிரதேச பரிசோதனைகளின் இறுதி முடிவின் படியே விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சிறுமியின் தந்தையும் கோழியிறைச்சி விற்பனை உரிமையாளரிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அட்டுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிஷா தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை காணாமல் போன ஒன்பது வயது சிறுமியின் சடலம் நேற்று அட்டுளுகம பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டின் பின்புறமுள்ள சதுப்பு நிலப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

அட்டுளுகம பிரதேசத்தை சேர்ந்த அப்பாவி சிறுமியை கொலை செய்த சந்தேக நபர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...