அட்டுளுகம சிறுமி மரணம்: குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைகள் ஆரம்பம்

Date:

அட்டுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிஷா என்ற 09 வயது சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மையை கண்டறியும் விசாரணைகள் இடம்பெறுவதாக பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ‘நியூஸ் நவ்’ செய்தி தளத்துக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், குறித்த சிறுமியின் பிரதேச பரிசோதனைகளின் இறுதி முடிவின் படியே விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சிறுமியின் தந்தையும் கோழியிறைச்சி விற்பனை உரிமையாளரிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அட்டுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிஷா தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை காணாமல் போன ஒன்பது வயது சிறுமியின் சடலம் நேற்று அட்டுளுகம பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டின் பின்புறமுள்ள சதுப்பு நிலப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

அட்டுளுகம பிரதேசத்தை சேர்ந்த அப்பாவி சிறுமியை கொலை செய்த சந்தேக நபர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...

காஸா உடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல்:வெள்ளை மாளிகை தகவல்!

டிரம்ப் - நெதன்யாகு மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்தது. காஸாவில் அமைதியை நிலைநாட்ட...