அட்டுளுகம சிறுமி மரணம்: குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைகள் ஆரம்பம்

Date:

அட்டுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிஷா என்ற 09 வயது சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மையை கண்டறியும் விசாரணைகள் இடம்பெறுவதாக பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ‘நியூஸ் நவ்’ செய்தி தளத்துக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், குறித்த சிறுமியின் பிரதேச பரிசோதனைகளின் இறுதி முடிவின் படியே விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சிறுமியின் தந்தையும் கோழியிறைச்சி விற்பனை உரிமையாளரிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அட்டுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிஷா தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை காணாமல் போன ஒன்பது வயது சிறுமியின் சடலம் நேற்று அட்டுளுகம பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டின் பின்புறமுள்ள சதுப்பு நிலப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

அட்டுளுகம பிரதேசத்தை சேர்ந்த அப்பாவி சிறுமியை கொலை செய்த சந்தேக நபர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர்

இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி மஹிந்த பராக்கிரம...

இலங்கை வந்தார் இங்கிலாந்து துணைப் பிரதமர் டேவிட் லாம்மி!

இங்கிலாந்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ விஜயம்...

AI Impact Summit 2026-ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்தியா பயணம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், ‘AI Impact Summit...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று...