அட்டுளுகம பிரதேசத்தில் காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாக மீட்பு!

Date:

பண்டாரகம, அட்டுளுகம பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் 9 வயது சிறுமியின் சடலம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

வீட்டில் இருந்து சுமார் 150 மீற்றர் தூரத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலையில் சிறுமி சம்பவத்தை எதிர்கொள்ள நேரிட்டதாக பொலிஸ் குழுக்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அட்டுளுகம பள்ளிவாசலுக்கு முன்பாக வசிக்கும் அல்கஸ்ஸாலி வித்தியாலயத்தைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷாவின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று (27) காலை 10:00 மணியளவில் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கடைக்கு சென்ற சிறுமி காணாமல் போனதாகக் கூறப்பட்டதை அடுத்து, சிறுமியை தேடும் பணியில் நான்கு பொலிஸ் குழுக்களை நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற  தாழ் அமுக்க வலயம் தொடர்ந்தும் நிலை...

மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழு!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து,...

புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் பி.ஏ. ஹுசைன்மியா நியமனம்!

மலாய், தென் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய ஆய்வுகளில் சர்வதேச ரீதியாக அறியப்படும்...

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலை குறைப்பு

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலைகளின் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடத...