அட்டுளுகம பிரதேசத்தில் காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாக மீட்பு!

Date:

பண்டாரகம, அட்டுளுகம பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் 9 வயது சிறுமியின் சடலம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

வீட்டில் இருந்து சுமார் 150 மீற்றர் தூரத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலையில் சிறுமி சம்பவத்தை எதிர்கொள்ள நேரிட்டதாக பொலிஸ் குழுக்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அட்டுளுகம பள்ளிவாசலுக்கு முன்பாக வசிக்கும் அல்கஸ்ஸாலி வித்தியாலயத்தைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷாவின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று (27) காலை 10:00 மணியளவில் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கடைக்கு சென்ற சிறுமி காணாமல் போனதாகக் கூறப்பட்டதை அடுத்து, சிறுமியை தேடும் பணியில் நான்கு பொலிஸ் குழுக்களை நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...