‘அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்ட எம்.பிக்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்’:லக்ஷ்மன் கிரியெல்ல

Date:

அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிக் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று (20) பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை தெரிவித்தார்.

இவ்வாறான நியமனங்கள் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதில்லை என்றும் எதிர்க்கட்சிகளின் நல்ல ஆதரவை வழங்குவதற்கும் கட்சித் தலைவர் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே கட்சியின் தீர்மானத்திற்கு புறம்பாக அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் இன்று காலை அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...