அல்ஜசீரா ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லே படுகொலை மிலேச்சத்தனமான செயல்: இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

Date:

உலகில் உள்ள ஊடகவியலாளர்கள் முகம் கொடுக்கின்ற மிகமோசமான சவால்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்ற நிகழ்வுதான் கடந்த வாரம் இடம்பெற்ற உலகப் புகழ்பெற்ற சர்வதேச ஊடகமான அல்ஜசீரா ஊடகவியலாளரான ஷிரீன் அபு அக்லே ஒருவரின் படுகொலையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கடந்த பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காலனித்துவ கொள்கையை பின்பற்றி, கைப்பற்றியுள்ள பலஸ்தீன் பூமியில் இஸ்ரேல் இராணுவம் நிகழ்த்தி உள்ள கொடூர சம்பவம் காட்டுவது என்னவென்றால் உலகெங்கிலும் அடக்குமுறைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் இலக்காகியுள்ள மக்களின் குரலை தணிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற மிலேச்சத்தனமான செயலாகும்.

மேலும். இந்தப் படுகொலையானது உலக ஊடகவியலாளர்களின் உள்ளங்களில் மாத்திரமன்றி உலக வாழ் மக்களின் உள்ளங்களிலும் கருப்புப் புளியை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகெங்கிலுமுள்ள ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமாக மற்றும் பாதுகாப்பாக தமது தேவைகளை நிறைவேற்றுவதற்கான அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

உலகில் ஜனநாயகத்தை மதிக்கின்ற அனைவரையும் இணைத்துக் கொண்டு இலங்கைப் பாராளுமன்றத்தில் வீற்றிருக்கும் நாமும் நினைவு படுத்துகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...