அல்ஜஸீரா ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லேவின் மறைவுக்கு ரவூப் ஹக்கீம் இரங்கல்!

Date:

அல்ஜஸீரா ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லே கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பலஸ்தீன தூதரகத்தில் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

இன்று பாலஸ்தீன தூதரகத்திற்குச் சென்று, மிகவும் மரியாதைக்குரிய ஒரு பத்திரிகையாளரின் கொடூரமான கொலையின் சீற்றத்தையும் பாலஸ்தீன தூதரக அதிகாரிகளுடன் அதிர்ச்சியையும் பகிர்ந்துகொண்டார்.

இதேவேளை சியோனிச ஆட்சிகள் பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் தங்கள் அட்டூழியங்களைத் தொடர்ந்துள்ளன.

ஷிரீன் அபு அக்லே போன்ற துணிச்சலான பத்திரிகையாளர்கள் தான் ஆக்கிரமிப்பின் உண்மைகளை உலகுக்கு அம்பலப்படுத்தினார்.

எல்லாம் வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னித்து தியாகியாக (ஷாஹீத்) ஏற்றுக்கொள்வானாக எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஷிரீன் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அத்துமீறலை தகவல்களை உலக நாடுகளுக்கு கொண்டு சென்றததுடன் பாலஸ்தீன அகதிகள் முகாமில் இஸ்ரேல் இராணுவ வீரர்களின் தேடுதல் வேட்டை குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...