அவிசாவளை , கல்முனை பகுதிகளில் 2 சிறுவர்களை காணவில்லை!

Date:

அவிசாவளை, கொட்டகொடவத்த பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரும் காணாமல் போயுள்ளார்.

தமது பிள்ளை வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த மாணவன் கடந்த (28) முதல் காணாமல் போயுள்ளதாக அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பெற்றோர் நேற்று (29) இரவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இவர் முன்பு வீட்டை விட்டு வெளியேறி நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து சில நாட்கள் கழித்து திரும்பினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கல்முனையில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி, நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பு பாடசாலையில் இருந்து காணாமல் போனதாக புகாராளிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு...

அதிகரித்துள்ள லிட்ரோ சமையல் எரிவாயு விலை: புதிய விலைப்பட்டியல்

உள்நாட்டு சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிட்ரோ கேஸ் நிறுவனமும், லாஃப்ஸ் கேஸ்...

ஜனாதிபதி தலைமையில் ‘தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்’ இன்று ஆரம்பம்!

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல் கல்லைக் குறிக்கும் வகையில்,...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் மழை

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யுமென...