ஆசிரியர் ஒருவர் வயல் வெளியில் இருந்து சடலமாக மீட்பு: மண்டூரில் சம்பவம்!

Date:

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் உள்ள வயல் பிரதேசத்தில் இருந்து ஆசிரியர் ஒருவர் நேற்று மாலை (10) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்டூர் பிரதேசத்தைச்சேர்நத (48) வயதுடைய பூபாலபிள்ளை சசிகரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
சம்பவ தினமான நேற்று பாடசாலை விடுமுறை என்பதால் தனது மதிய போசண உணவினை உண்டு விட்டு தனது வயலினை பார்வையிடுவதற்காக சென்றவர் நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் அவரின் வயல் பிரதேசத்தில் மரணமடைந்த நிலையில் காணப்பட்டதனை அவதானித்த நபர் ஒருவர் அவரின் வீட்டாருக்கு சம்பவத்தை தெரிவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை-தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...