ஆயிஷாவின் குடும்பத்திற்கு விரைவில் நீதி வழங்க ஜனாதிபதி உறுதி!

Date:

‘ஈவிறக்கமின்றி முறையில் கொல்லப்பட்ட சிறுமி ஆயிஷாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த கொடூரமான குற்றத்திற்காக அவரது குடும்பத்திற்கு விரைவான நடவடிக்கை மற்றும் நீதியை விரைவுபடுத்துவதற்கு நான் உறுதியளிக்கிறேன், என்று ஜனாதிபதி தனது ட்வீட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விரைவான நடவடிக்கை மற்றும் நீதியை துரிதப்படுத்துவதாக உறுதியளித்தார்.

அட்டுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா மே 27ஆம் திகதி காணாமல் போயிருந்தார். இன்று மே 28ஆம் திகதி வயல் வெளிகள் அமைந்துள்ள ஓடைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய உதவும் பிரேத பரிசோதனை நாளை, மே 29 ஆம் தேதி நடைபெறும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதித் தலைவர் தாரிக் ரஹ்மான்- அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின்...

நியூ யார்க் மேயராக மம்தானி பதவியேற்பு:குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம்

நியூயார்க் நகரின் மேயராக சேர்ந்த ஸோரான் மம்தானி வியாழக்கிழமை அதிகாலை பதவியேற்றுக்...

போக்குவரத்து வசதியற்ற 40 கிராமிய வீதிகளில் இன்று முதல் பஸ் சேவை ஆரம்பம்!

இதுவரை பஸ் போக்குவரத்து வசதிகள் இல்லாத, பொருளாதார ரீதியாக இலாபமற்ற 40...