ஆயிஷா கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்? :பொலிஸ் ஊடகப்பிரிவின் தகவல்

Date:

பண்டாரகம அட்டுளுகம பகுதியில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் 9 வயது சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பாக ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு நியூஸ் நவ் செய்தி தளத்துக்கு தெரிவித்தது.

அதேநேரம், தற்போது சமூக ஊடகங்களில் பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பகிரப்படும் செய்தி தவறானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் ஆயிஷாவின் மாமா ஆவார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக 22 பேரிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளதாகவும் சிறுமியின் பிரதேச பரிசோதனை அறிக்கை இன்று மாலை வெளிவரும் என பொலிஸ் ஊடகப்பிரிவின் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் விசாரணைக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நபரின் உடலில் பல இடங்களில் கீறல்கள் காணப்பட்டதாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரின் வீட்டின் படுக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சேறும் சகதியுமான துணியொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சிறுமி காணாமல் போன தினம் காலை 10.15 மணியளவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் இதற்கு முன்னர் தாய் மற்றும் மகள் தனியாக இருந்த வீட்டிற்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளதாகவும், சில மாதங்களுக்கு முன்னர் பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்

மே 27 வெள்ளிக்கிழமையன்று பண்டாரகம அட்டுளுகமவில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட அவர், மறுநாள் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...