‘இந்த மாதம் நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் தகவல் தவறானது’

Date:

விமான சேவை பயன்பாட்டுக்கான எரிபொருள் இறக்குமதி செய்யப்படாததால் எதிர்வரும் மே 31 ஆம் திகதி பிறகு விமான நிலையங்கள் மூடப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை என விமான நிலைய கடமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்று கருத்த தெரிவித்த அவர் அதிகாரப்பூர்வமாக அனைத்து செய்திகளையும் மறுத்துள்ளார் எனவும் அவை தவறானவை என்று கூறினார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் தரையிறக்கப்பட்ட பல விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஏற்கனவே சென்னைக்கு திரும்பியுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜெட் ஏ1 எரிபொருள் உண்மையில் இறக்குமதி செய்யப்பட்டது என்றும் மூன்றாம் தரப்பினரும் ஜெட் எரிபொருளை இறக்குமதி செய்வதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன ஆதாரங்கள் வெளிப்படுத்தின.

இதேவேளை இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் காணப்படுவதாகவும் எரிபொருள் நெருக்கடி இலங்கையை உலகத்திலிருந்து விலக்கி வைப்பதாக தெரிவித்து குறித்த செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...