இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிக்கை!

Date:

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து தாம் அறிந்துள்ளதாகவும் ஆனால் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் திட்டமிட்டபடி நடைபெறுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டவுடன் கொள்கைப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குத் தயாராகும் வகையில் தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் திட்டமிட்டபடி இடம்பெறும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் தற்போதைய நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இலங்கையில் நிலவும் அமைதியின்மை மற்றும் வன்முறைகள் தொடர்பிலும் அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டுத் தலைவர் மசாஹிரோ நோசாகி தெரிவித்துள்ளார்.

அத்தோடு ‘அதிகரிக்கும் சமூக பதற்றங்கள் மற்றும் வன்முறைகள் குறித்து தாம் அக்கறை கொண்டுள்ளதாகவும்’ அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையிலான ‘தொழில்நுட்ப மட்ட’ கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன, புதிய இலங்கை அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் கொள்கை விவாதங்களுக்கு தயாராக இருக்கும் வகையில் தொடரும் என நோசாகி கூறினார்.

Popular

More like this
Related

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...