ஊரடங்கு உத்தரவு நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நாளை (14) மாலை 6.00 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
இவ்வாறு அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் (15) காலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் அரச, தனியார் மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய இரவு 7 மணி வரை மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.