எம்.பிக்களின் வீடுகளுக்கு எதிராக வன்முறையை தூண்டியது எதிர்க் கட்சிகளே : கனக ஹேரத் குற்றச்சாட்டு!

Date:

பொதுஜன பெரமுன அரசியல்வாதிகளுக்கு சொந்தமான வீடுகள், மற்றும் சொத்துக்கள் மீது அண்மைக்காலமாக தாக்குதல்களை ஏற்படுத்தியதற்காக கேகாலை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேநேரம், முன்னிலை சோசலிஸ்ட் கட்சி,ஜே.வி.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆகிய கட்சிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அலை வீசும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுன நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் எனவும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

வன்முறை கும்பல்களிடமிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உதவுமாறு அவர் பாராளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கண்டனம் தெரிவிப்பதாகவும் நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தார்.

மேலும், வன்முறையை நிறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுடன் பொது மக்களிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்ததாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...