எரிபொருளைக் கொண்டு செல்ல பொலிஸ் பாதுகாப்பு தேவை: தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்கள்

Date:

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில குழுக்கள் செய்த பல்வேறு இடையூறுகளை மேற்கோள் காட்டி, சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி சாந்த சில்வா எரிபொருள் போக்குவரத்தின் போது பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கடமைக்கு சமூகமளிக்க முடியாது என பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (22) சராசரியாக 3,600 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் பெற்றோலை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழமையான நாட்களில், ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகம் நடைபெறாது. எவ்வாறாயினும், இன்றும் எரிபொருள் விநியோகம் தொடர்கிறது, குறிப்பாக 92 ஒக்டேன் பெற்றோலின் விநியோகம் தொடர்கிறது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (09) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...