எரிபொருள் விலைகள் தொடர்பான விலைச்சூத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விலைச்சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் விலை மற்றும் ஏனைய காரணிகள் என்பவற்றை கருத்தில் கொண்டு இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விலைச்சூத்திரத்தில் எரிபொருள் இறக்குமதி செலவுகள், தரையிறக்குவதற்கான செலவுகள், விநியோகிப்பதற்கான செலவுகள் மற்றும் வரி கட்டணம் என்பற்றின் அடிப்படையில் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் எந்தவித இலாபமும் இதனூடாக கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.