‘ஒரு எண்ணெய் கப்பலைக் கூட கொள்வனவு செய்ய முடியவில்லை’: சபையில் ஹர்ஷ

Date:

நாட்டில் எஞ்சியுள்ள வெளிநாட்டு கையிருப்பில் இருந்து ஒரு எண்ணெய் கப்பலைக் கூட கொள்வனவு செய்ய முடியாது என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

தற்போது 50 மில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும், நாடு திவாலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி உணவுப் பணவீக்கம் 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சுகாதாரத்துறையை நடத்துவதற்கு பணம் இல்லை என்றும், அதற்கு பிரதமர் கொஞ்சம் பணம் தருமாறும் ஹர்ஷ கேட்டுக் கொண்டார்.

தரவுகளை மறைப்பது எமது மோசடியாகும் எனவும் அவ்வாறு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் டொலரின் மதிப்பு இதுவரை 100 சதவீதம் குறைந்துள்ளது, நாட்டில் என்ன நடக்கிறது என்பதுதான் கேள்வி
அரசாங்கம் எடுக்கும் இந்த முட்டாள்தனமான முடிவுகளுக்கு யார் பொறுப்பு என்று ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...