காலி முகத்திடலில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது!

Date:

கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் பொது மக்கள் எதிர்ப்புத் தளத்தில் இன்று விசேட கொண்டாட்டங்களுடன் நோன்பு பண்டிகை கொண்டாடப்பட்டது.

புத்த துறவிகள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள் உட்பட பல மதத் தலைவர்கள் பண்டிகைகளில் பங்கேற்றதுடன் அனைவரும் இணைந்து இ ஈத் உணவும் பரிமாறப்பட்டன.

காலி வீதியில் உள்ள பழைய பாராளுமன்றத்திற்கு எதிர்புறத்தில் பிரியாணியுடன் சவான்களை பகிர்ந்து கொண்ட பொதுமக்களும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் பொதுமக்கள் எதிர்ப்புத் தளத்தில் இன்று விசேட கொண்டாட்டங்களுடன் ஈத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதேவேளை அரசாங்கத்துக்கு எதிரிப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இலங்கை முஸ்லிம்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் முகமாக இலங்கை முஸ்லிம் சிவில் சமூகத்தினர் ஈதுல் பித்ரை நினைவுகூரும் வகையில் 700 மதிய உணவுப் பொட்டலங்களை ‘கொட்டகோகம’ போராட்ட தளத்தில் இன்று நன்கொடையாக வழங்கினர்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...