குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

Date:

ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் ஏற்கனவே நாள் மற்றும் நேரங்களை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 17ஆம் திகதி முதல் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழமை போன்று ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும், கடவுச்சீட்டு பெறுவதற்கு ஏற்கனவே நாள் மற்றும் நேரத்தை முன்பதிவு செய்தவர்கள் மட்டும் வருமாறு திணைக்களம் தெரிவித்திருந்தது.

இருப்பினும், பல வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே நாள் மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் சேவைகளைப் பெற வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக முன்பதிவு செய்யாமல் வரும் அனைவரும் சிரமங்களை எதிர்க்கொள்வதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, www.immigration.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து அல்லது 070 7101 060 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் நாள் மற்றும் நேரத்தை முன்பதிவு செய்பவர்கள் மாத்திரமே நிறுவனத்திற்கு வந்து சேவையை பெற்றுக்கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...