கோட்டா கம தாக்குதல்: பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டதில் ரூ.400 மில்லியனுக்கும் அதிகமான செலவு

Date:

காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகையில் நடைபெற்ற போராட்டத்தின் போது நாடு முழுவதும் தீ வைத்து எரிக்கப்பட்ட பேருந்துகளின் மொத்த மதிப்பு ரூ. 400 மில்லியனாகும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

அதேநேரத்தில் தீ வைக்கப்பட்டதில் 50 பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசமானதுடன் மேலும் 25 பேருந்துகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிகழ்வில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பஸ் சங்கங்கள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், விசாரணை முடிந்த பின்னர் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கிராம உத்தியோகத்தர் மட்டத்திலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டின் தற்போதைய நிலைமை பஸ் உரிமையாளர்களை கடினமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலை பஸ் உரிமையாளர்கள் ஊக்குவிக்கவில்லை அவர்கள் தங்கள் பேருந்துகளை வாடகைக்கு விட்டு தங்கள் வேலையைச் செய்து வருவதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...