சமீபத்திய போராட்ட பூமியாக பாராளுமன்ற வளாகத்தில் ‘ஹொரு கோ கம’ உருவானது!

Date:

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் மாணவர்கள் குழு ஒன்று, பாராளுமன்றம் செல்லும் பாதையில் ‘ஹோரு கோ கமா’ என்ற போராட்ட முகாமை அமைத்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்திற்கும் எதிராக அமைக்கப்பட்ட சமீபத்திய எதிர்ப்பு முகாம் ஆகும்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர்கள் நேற்று மாலை ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து பாராளுமன்ற வீதி வரை ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்ததுடன், மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை பிரயோகித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றம் செல்லும் பாதையில் முகாமிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதேவேளை அரசாங்கத்திற்கு எதிராக ‘கோட்டா கோ கம’ மற்றும் ‘மைனா கோ கம’ உருவாகியுள்ள நிலையில், தற்போது பாராளுமன்ற வளாகத்தில் ‘ஹொரு கோ கம’ உருவாகியுள்ளது.

நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ள நிலையில்இ அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த பகுதியில் கோட்டா கோ கம என்ற மாதிரி கிராமமும் உருவாக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...