சி.டி. விக்ரமரத்னவிடம் குற்றப் புலனாய்வு பிரிவு வாக்குமூலம்!

Date:

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் (21) இன்று பிற்பகல் வாக்கு மூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தயாராகி வருகின்றனர்.

இந்த வாக்கு மூலத்தைப் பெறுவதற்காக குற்றப்புலனாய்ப்பு பிரிவின் பொலிஸ் குழுவொன்று பொலிஸ் தலைமையகத்திற்குச் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களின் தொடர்பிலும், அவர்களை கலைக்க முற்பட்டமை தொடர்பிலும் வாக்குமூலம் பெறப்பட உள்ளது.

மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் இந்த வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் மா அதிபரும் பொது பாதுகாப்பு செயலாளரும் உத்தரவு பிறப்பித்ததன் காரணமாக அலரிமாளிகையில் இருந்து வந்தவர்கள் சுதந்திரமாக காலி முகத்திடலுக்கு வர அனுமதிக்கப்பட்டதாக தேசபந்து தென்னகோன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...