சீரற்ற காலநிலையால் 2,352 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்!

Date:

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 601 குடும்பங்களைச் சேர்ந்த 2,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இவர்களில் 373 குடும்பங்களைச் சேர்ந்த 1,362 பேர் உறவினர் வீடுகளிலும், 7 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் மூன்று முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் 82 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

களு கங்கைப் பள்ளத்தாக்கின் மேல் மற்றும் நடு ஓடை பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக இரத்தினபுரி பிரதேசத்தில் இருந்து சிறு வெள்ள மட்டமாகவும் களுத்துறை மில்லகந்த பிரதேசம் வரை உயர் வெள்ள மட்டமாகவும் உயர்ந்துள்ளது.

இதேவேளை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) சீரற்ற காலநிலைக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நிலவும் காலநிலை காரணமாக காங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மற்றும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...