சுகாதார துறைக்கு நிதியுதவி வழங்க ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை தீர்மானம்!

Date:

நாட்டின் சுகாதாரத் துறைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்றுக் குழு நேற்று கூடிய போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கப்படவுள்ளதுடன், தேசிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும், குறித்த நிதியுதவியின் அவசரத் தன்மை கருதி நன்கொடைக்கான நிதியை உடனடியாக விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...

வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை

தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை...

இறைவரித் திணைக்களம் வரலாற்றில் மிக உயர்ந்த வரி வருவாய் வசூலை அடைந்தது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த ஆண்டு அதன் வரலாற்றில் மிக...

திருகோணமலை பௌத்த சிலை விவகாரம்: தர்ம சக்தி அமைப்பினர் நேரில் ஆய்வு

திருகோணமலையில் ஏற்பட்டுள்ள பௌத்த சிலை தொடர்பான சர்ச்சை குறித்து உண்மை நிலையை...